tamilnadu

img

வடசென்னை கண்ட சான்றோர்கள்” நூல் வெளியீட்டு விழா

வரலாற்று ஆய்வாளர் புலவர் பா.வீரமணி எழுதிய  ”வடசென்னை கண்ட சான்றோர்கள்” நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (ஆக.24) திருவொற்றியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் நூலை வெளியிட பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரையாற்றினார். பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சிகரம் ச.செந்தில்நாதன், வழக்கறிஞர் பானுமதி பாஸ்கரன் ஆகியோர் நூலை திறனாய்வு செய்து கருத்துரை வழங்கினர். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு வரவேற்புரையாற்றினார். மு.தூயமூர்த்தி நன்றி கூறினார். சித்து ந.ஜெயராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிறைவாக நூலாசிரியர் பா.வீரமணி 49 சான்றோர்களின் தொகுப்பு குறித்து ஏற்புரையாற்றினார். இந்நிகழ்வில் சென்னை முழுவதிலும் உள்ள பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், தொழிற்சங்கத்தலைவர்கள், கவிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், முற்போக்கு அமைப்புகளின் நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.